ஆந்திராவில் மதுரை இளைஞர் கொலை :7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தமிழக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் மதுரை இளைஞர் கொலை :7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
x
மதுரையை சேர்ந்த நீலமேக அமரன் என்பவரை, ஆந்திராவின் வேம்பல்லி சோதனைச் சாவடி அருகே, காரில் வந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிச் சென்று வெட்டிப் படுகொலை செய்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை கைது செய்திருப்பதாக எலமச்சிலி காவல் நிலைய ஆய்வாளர் விஜயானந் தெரிவித்துள்ளார். இந்த ஏழு பேரும்  மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கஞ்சா கடத்தலில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலே கொலைக்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொலை நடந்தபோது, காரில் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்த நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்