"சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம்" - இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை

சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் - இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை
x
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள ஜெட்டா நகரில் ஐ.ஐ.எஸ்.ஜெ., என்றழைக்கப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது, கட்டடம் குறித்த பிரச்சினையில், சவுதி நீதிமன்றம் வரும் 9-ஆம் தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  

இந்த நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 'தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்' என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பிவைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்