மூன்றில் ஒரு பங்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு...
x
* ஏ.டி.ஆர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 83 சட்ட மன்ற உறுப்பினர்களில்  ஆயிரத்து 355 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் உள்ள 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அதில் 44 பேர் திமுகவையும், 28 பேர் அதிமுகவையும் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

* அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 63 சதவீத சட்டமன்ற
உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் இது  கேரளாவில் 62 சதவீதமாகவும்,  பிகாரில் 58 சதவீதமாகவும், மகாராஷ்ட்ராவில் 57 சதவீதமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.

* மக்களவையில் 179 உறுப்பினர்கள் மீதும் மாநிலங்களவையில் 51 உறுப்பினர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

* இந்த நிலையில், வழக்குகள் முடிந்து, குற்றம் நிருபிக்கபட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை  தண்டனை விதிக்கபட்டால் மட்டுமே இவர்கள் பதவி இழப்பை  சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடதத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்