ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் - 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

ஐதராபாத்தில் சாலையின் நடுவே ஒருவரை கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் - 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
x
ஐதராபாத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் ரமேஷ் என்பவர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் ரமேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அத்தாப்பூர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த ரமேஷை, மகேஷின் நண்பர்கள் சிலர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது நடுரோட்டில் ரமேஷை கீழே தள்ளி கோடாரியால் கொடூரமாக வெட்டிச் சாய்த்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை தடுக்க முயன்ற போதும் கோபம் தணியாமல் வெட்டினர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் கொலையாளிகள் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து ராஜேந்திர நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் பட்டப்பகலில் பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்