"வாக்கு வங்கி அரசியல் சமுதாயத்தையே அழித்துவிட்டது" - பிரதமர் நரேந்திர மோடி

வாக்கு வங்கி அரசியல், ஒட்டுமொத்த சமுதாயத்தையே கரையானை போல் அழித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கி அரசியல் சமுதாயத்தையே அழித்துவிட்டது - பிரதமர் நரேந்திர மோடி
x
* மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சில இஸ்லாமிய நாடுகளில் கூட 'முத்தலாக்' ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், ஒரு பெண்ணை தலைவராக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, வாக்கு வங்கி அரசியலால், முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களை பற்றி கவலைப்படவில்லை என தெரிவித்தார். 

* மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எதிரி போல் நடந்து கொண்டதாக பிரதமர் குற்றம் சாட்டினார். தான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, தம்மை சந்தித்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள், தங்களுடைய பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்தார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.  நாட்டில் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியுடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்