இமாசல் பிரதேசத்தி​ல் கனமழை - பெரு வெள்ளம்

இமாசல் பிரதேசத்தில் கனமழை பாதிப்பில் இருந்து 7 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இமாசல் பிரதேசத்தி​ல் கனமழை - பெரு வெள்ளம்
x
இமாச்சல் பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால், மாநிலம் முழுவதும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குலு, மணாலி பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். வெள்ளத்தில் 16 பேர் பலியான நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா நகரான குலு பகுதியில் சிக்கித் தவித்து வருபவர்களை மீட்டு, விமானம் மூலம் அழைத்து வருகின்றனர். கோக்சர், பட்ஸி, குன்சும், ரோக்டாங் சுரங்கம் போன்ற பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றதில் கொல்கத்தாவை சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ளவர்களுக்கு, வான் வழியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 



Next Story

மேலும் செய்திகள்