கவுரவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதாவுக்கு ஆறுதல் கூறினார் கவுசல்யா...

தெலங்கானாவில் கவுரவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதாவை, உடுலை சங்கரின் மனைவி கவுசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கவுரவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதாவுக்கு ஆறுதல் கூறினார் கவுசல்யா...
x
தெலங்கானாவில் காதல் திருமணம் செய்ததால், பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்ட  இளைஞர் பிரனய்யின் மனைவி அம்ருதாவை தமிழகத்தில் கவுரவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுலை சங்கரின் மனைவி கவுசல்யா நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு, மிரயாலகுடா என்ற இடத்தில் நிகழ்ந்தது. தைரியமாக இருக்குமாறு   ஆறுதல் கூறிய கவுசல்யா, நீதி கேட்டு அம்ருதா நடத்தும் பேரணியில் தாம் பங்கேற்பதாக உறுதி அளித்தார். ஆறுதல் கூறிய கவுசல்யாவுக்கு, அம்ருதா, முடிவில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்