தெலங்கானா இளைஞர் ஆணவக்கொலை : மாருதி ராவை கொலை செய்ய தூண்டிய மகளின் வீடியோ

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான், தெலங்கானா இளைஞர் பிரனாயி கொலை செய்யப்பட முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா இளைஞர் ஆணவக்கொலை : மாருதி ராவை கொலை செய்ய தூண்டிய மகளின் வீடியோ
x
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலங்கானாவின் நல்கொண்டா பகுதியில், கலப்புத்திருமணம் செய்து கொண்ட பிரனாய் என்பவரை அவரின் மனைவி அம்ரிதாவின் தந்தை மாருதி ராவ், கூலிப்படை மூலம் கொலை செய்தார். மாருதிராவ்,  பிரனாயை கொல்ல முடிவெடுக்க காரணம் ஒரு வீடியோ தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அம்ரிதா - பிரனாய் திருமணத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, அம்ரிதா தனது facebook பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சினிமாவை மிஞ்சும் அளவில் இருந்த அந்த வீடியோவும் வேகமாக பரவியது.  சமூக வலைதளங்களில் அதைப்பார்த்த பலரும், மாருதி ராவிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால் அவர் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, "பிரனாய்யை கொலை செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டால், அதுவும் இதேபோன்று வேகமாக பரவும் அல்லவா?" என தனது நண்பரிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கூலிப்படையை ஏவியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்