"எஸ்-400 ஏவுகணை வாங்கும் பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியது" - நிர்மலா சீதாராமன்

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எஸ்-400 ஏவுகணை வாங்கும் பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியது - நிர்மலா சீதாராமன்
x
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு முன்னர், எஸ்-400 ரக ஏவுகணையை வாங்கும் பேச்சுவார்த்தை முடிந்து கையெழுத்தாகும் நடவடிக்கைகளை முடித்தாக வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். எஸ்-400 ரக ஏவுகணையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை விட 9 சதவீதம் மலிவு விலையில்தான் 'ரபேல்' போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன எனவும்  ராணுவ   நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்