சபரிமலை கோயில் நடை திறப்பு : பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி

55 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயில் நடை திறப்பு : பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி
x
கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் சூழ்ந்ததால் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பம்பையில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நேற்று  மாலை திறக்கப்பட்டது. வரும் 21 ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும், தினமும் படி பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது. போலீஸார் அனுமதிக்கும் பாதையில் மட்டும் பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்