"முதல்வருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது" - ஆந்திர துணை முதல்வர்

நதிநீர் பிரச்சினையில் மகாராஷ்டிர நீதிமன்றம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
முதல்வருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது - ஆந்திர துணை முதல்வர்
x
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நதிநீர் பிரச்சினையில், மகாராஷ்டிர  நீதிமன்றம், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், கைது வாரண்ட் பிறப்பிக்கும் முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்