"இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தைச் சேர்ந்த, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ரகசிய தகவல்களை விற்றதாக, கேரள மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தது. இது தொடர்பாக, நம்பி நாராயணன், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில், அவர் ரகசியங்களை விற்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
* இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நம்பி நாராயணுக்கு கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, உத்தரவிட்டது. மேலும், இதில் தவறு செய்த அதிகாரிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை நியமித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Next Story