சாரிடான், டி-கோல்ட் உள்ளிட்ட 327 மாத்திரைகளுக்கு தடை...

வலிநிவாரணியாக பயன்படுத்தப்படும் சாரிடான் உள்ளிட்ட 327 மாத்திரை வகைகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
சாரிடான், டி-கோல்ட் உள்ளிட்ட 327 மாத்திரைகளுக்கு தடை...
x
சாரிடான் மாத்திரை, தோள் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் Panderm என்ற cream, சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் gluconorm மாத்திரை, corex என்ற இருமல் டானிக், ஜலதோஷத்திற்கு பயன்படுத்தப்படும் d-cold மாத்திரை உள்ளிட்டவைகளில், மனித உடலுக்கு கேடு உண்டாக்கும் நச்சுக்கள் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை தடை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இவற்றிற்கு கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே தடைவிதிக்கப்பட்டதும், அதற்கு உச்சநீதிமன்றத்தில் மருந்து நிறுவனங்கள் தடை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்