தெலுங்கானா பேருந்து விபத்து : நடத்துனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்..!

தெலுங்கானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடத்துனர் பரமேஸ்வர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா பேருந்து விபத்து : நடத்துனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்..!
x
ஜகத்யாலா மலைப்பகுதி மிகவும் அபாயகரமானது என்றும் இங்கு பேருந்து சேவைக்கு உகந்தது அல்ல என்றும் அதிகாரிகளிடம் பலமுறை எச்சரித்தாக நடத்துனர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். விபத்து நிகழ்ந்த போது ஓட்டுனர் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆசிலேட்டரை அழுத்திருக்கலாம் என்றும் பரமேஸ்வர் கூறியுள்ளார். கடந்த வாரம் தான் சிறந்த ஓட்டுனருக்கான விருதை சீனிவாசராவ் பெற்றதாகவும், ஆனால், தற்போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும் நடத்துனர் பரமேஸ்வர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்