சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - பதற வைக்கும் காட்சிகள்
பெங்களூருவில் சாலையில் செல்பவர்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்கின்றன.
பத்மாநகர் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன்மயா கவுடா என்ற சிறுவனை நாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பெங்களூருவில் நாய்க்கடியால் கடந்த ஓராண்டில் மட்டும், 74 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.எனவே, தெருநாய்கள் அட்டகாசத்தை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story