நிஜாம் அருங்காட்சியகத்தில் திருடிய 2 பேர் கைது

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் தங்க டிபன் பாக்ஸ் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார், அதை மீட்டுள்ளனர்.
நிஜாம் அருங்காட்சியகத்தில் திருடிய 2 பேர் கைது
x
* நிஜாம் ஆட்சி காலத்தில்  பயன்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள், ஹைதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை  400 பொருட்களை மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

* கடந்த 3ஆம் தேதி அருங்காட்சியகத்தில் இருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் உடன் கூடிய தங்கத்தால் தயார் செய்யப்பட்ட கப் மற்றும் சாசர், தங்க ஸ்பூன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

* இந்த திருட்டில் தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஷ் பாஷா ஆகியோர் ஈடுபட்டது போலீசார்  விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், காவல் ஆணையாளர் அஞ்சனிகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு படையினர் கவுஸ் பாஷா,  முபீம் ஆகியோரை நேற்று கைது செய்து தங்க டிபன் பாக்ஸ், தங்க டீஸ்பூன் ஆகியவற்றைக் கைப்பற்றினர். தங்க தகடு பொருத்தப்பட்ட குரானை திருட, அவர்கள்  திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்