ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்
"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து" - தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி
இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு ஓரினசேர்க்கைஉள்ளிட்ட இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக நேற்று தீர்ப்பளித்தது.
Next Story