வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா - ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று இந்தியா என்று சைப்ரஸ் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா - ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
x
சைப்ரஸ் பிரதிநிதிகள் சபையில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 2 சதவீதமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் முதலீடு மற்றும் வணிகம் செய்ய சைப்ரஸ் நாட்டிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். 

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை ஒரே நிதிவரையறைக்குள் கொண்டு வந்தது போன்றது இந்தியாவில் தற்போது அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார். 

பொறுப்பான நாடுகள் என்ற வகையில் இந்தியாவும், சைப்ரசும் சர்வதேச முறையில் உள்ள சவால்களை சந்திப்பதில் உறுதியாக உள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் சுட்டிக்காட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்