மனநலம் பாதிக்கப்பட்டு கேரள முகாமில் உள்ள 15 தமிழர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

கேரளாவில் உள்ள பல்லுருத்தி முகாமில் வெளி மாநிலங்களை சேர்ந்த 55 மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு கேரள முகாமில் உள்ள 15 தமிழர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
x
கேரளாவில் உள்ள பல்லுருத்தி முகாமில் வெளி மாநிலங்களை சேர்ந்த 55 மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர். அவர்களின் உறவினர்களை கண்டறிந்து, ஒப்படைக்க கேரளா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மேத்யூ தலைமையிலான குழு, அம்மாநில மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்தது. 

இது தொடர்பாக கேரள சட்டப்பணிகள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 15 பேரை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியாக , அவர்களை தெரிந்தவர்கள் அந்தந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகளை ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஐ.ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்