முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மறு கட்டமைப்பு பணிகள் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய மீள் குடியமர்த்தல் மற்றும் மறு கட்டமைப்பு குறித்து, சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மழை வெள்ளத்துக்கு 483 பேர் பலியாகி உள்ளதாகவும், 14 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவித்தார். படுகாயமடைந்த 140 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 59 ஆயிரத்து 296 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். 

இதுபோல, மீள் குடியமர்த்தல் மற்றும் மறுகட்டமைப்பு பணி சவாலானது எனவும் இதற்காக மத்திய அரசிடம் அதிக நிதியை எதிர்பார்ப்பதாக​வும் கூறினார். உலக வங்கி உள்பட பலர் உதவ முன் வருவதை, மாநில அரசின் கொள்கை வரவேற்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். மறு சீரமைப்பு பணிகளில் வெளிநாடுகளில் உள்ள கேரள மக்கள் மற்றும் லோக கேரள அமைப்பை இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மீட்பு பணி வெற்றி பெற மீனவர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே அணை நிர்வாகத்தில் ஏற்பட்ட தவறே பேரழிவுக்கு காரணம் எனவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்