பணமதிப்பிழப்பு மீதான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை : பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

பண மதிப்பிழப்பு தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கைக்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு மீதான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை : பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
x
ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 2016-இல் வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இது குறித்து ஆய்வு செய்தது. 31 பேர் கொண்ட அந்தக் குழுவில் பாஜகவைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், காங்கிரஸ் எம்.பி. க்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர். 
இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், பண மதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு போன்றவை பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்