"நிவாரண பொருட்களை கட்சியினருக்கு மட்டும் கொடுக்கின்றனர்" - ராஜகோபால்
கேரள வெள்ளம் தொடர்பாக, அம்மாநில அரசு மீது பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபால் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கேரள வெள்ளம் தொடர்பாக, அம்மாநில அரசு மீது பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபால் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் கேரளாவில் பொதுமக்களால் அரசுக்கு அளிக்கும் நிவாரண பொருட்களை ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் அரசியல் சார்ந்தவர்களுக்கு கொடுத்து தங்கள் சுயலாபத்தை தேடுவதாகவும் புகார் கூறினார். மேலும் ஐக்கிய அரபு அரசு நிவாரணம் தருவதாக அதிகாரபூர்வமாக கூறாத நிலையில் சிலர் மத்திய அரசு மீது வதந்தியை பரப்புவதாக அவர் கூறினார்.
Next Story