திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி

திருப்பதி கோயிலில் மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்
திருப்பதி கோயிலில் போலி அடையாள அட்டை மூலம் டிக்கெட் பெற்று மோசடி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் நடக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. இதற்காக 3 மாதங்களுக்கு முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் அனுமதிக்கப்படுவர். ஆனால் இதில் போலி ஆவணங்களை காட்டி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தேவஸ்தான ஒப்பந்த ஊழியரான ஸ்ரீனிவாஸ் என்பவர் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்