குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்

கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மக்கள் தங்களின் வீடுகளில் மீண்டும் திரும்பி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்
x
கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மக்கள் தங்களின் வீடுகளில் மீண்டும் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் ஏலூர் பகுதியில் ராதாமணி என்பவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்து தூய்மைப்படுத்தி அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் இரவு 12 மணிக்கு வீட்டு வாசலில் சிறுத்தை ஒன்று நின்றுள்ளது. இதை வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளார். சிறுத்தையின் கால்தடத்தை பார்த்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்