வாஜ்பாய் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, உத்தரகண்ட் மாநிலம் ஹிரித்துவாரில் கங்கையில் கரைக்கப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது
x
ஹரித்துவாரில் உள்ள பன்னாலால் பாலா கல்லூரியில் இருந்து, வாகனத்தில் ஊர்வலமாக வாஜ்பாயின் அஸ்தி கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, அஸ்தியை, அவரது வளர்ப்பு மகள் நமிதாவும், பேத்தி நிகாரி உள்ளிட்ட குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், அஸ்தி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்தனர். இது, அங்குள்ள பிரேம் ஆஸ்ரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர், கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்