வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவி செய்யுங்கள் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்

கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவி செய்யுங்கள் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்
x
கொட்டி தீர்க்கும் கனமழையால்  வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு, அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.80 அணைகள் திறந்து விடப்பட்டு உள்ளதாகவும்,324 பேர் உயிரிழந்து விட்டதாகவும் பதிவிட்டுள்ள பினராயி விஜயன்,வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 லட்சத்து 24 ஆயிரம் பேர்,பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.எனவே,பாதிக்கப்பட்ட கேரள மக்கள், வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவி தேவை என அவர் குறிப்பிட்டு உள்ளார்.முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுமாறு, பினராயி விஜயன்,தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்