"முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்" - எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்   - எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை
x
* முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

* உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ள முன்னாள் பிரமதர் வாஜ்பாய், புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த 9 வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் 
குறிப்பிட்டிருந்தது. 

*இந்நிலையில்,முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்