விமான ஓடுதளத்திற்குள் புகுந்த வெள்ளம் : கொச்சி விமான நிலையம் மூடல்

கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
விமான ஓடுதளத்திற்குள் புகுந்த வெள்ளம் : கொச்சி விமான நிலையம் மூடல்
x
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் முழு கொள்ளளவை எட்டிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இடமலையார் மற்றும் இடுக்கி செருதோனி அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பெரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. இதை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்