72வது சுதந்திர தினம் : நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து...

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும் - குடியரசுத் தலைவர் உரை.
72வது சுதந்திர தினம் : நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து...
x
குடியரசு தலைவர் சுதந்திர தின உரை...

* 72வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து. 

* ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும். 

* தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளனர். 

* நாட்டு மக்களுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். 

* நமது சமூகத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள், அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

* எல்லையில் நின்று நம்மை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

* வறுமை ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்