" மத்திய அரசுக்கு எதிராக காங். பிரசாரம் " - ராகுல்காந்தி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், புதிய வியூகம் வகுப்பது குறித்து முடிவு எடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில், அக்கட்சியின் செயற்குழு கூடியது.
 மத்திய அரசுக்கு எதிராக காங். பிரசாரம்  - ராகுல்காந்தி அறிவிப்பு
x
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், புதிய வியூகம் வகுப்பது குறித்து முடிவு எடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில், அக்கட்சியின் செயற்குழு கூடியது. இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். உடல் நலக்குறைவு காரணமாக, இந்த கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்திற்குப்பின் ராகுல்காந்தி பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க, பாஜக அரசு தவறி விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். பெருகி வரும் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்த தீவிர பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்