தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்
x
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிர்காத் ஹக்கீம் தலைமையில்  6 எம்.பிக்கள் மற்றும் ஒரு எம்எல்ஏ அடங்கிய குழுவினர் அசாமுக்கு சென்றனர். ஷில்சார் விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை, அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்