மகாராஷ்ட்டிரா மாநிலம் ராய்காட்டில் 500 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : 33 பேர் பலி
மகராஷ்ட்டிர மாநிலம், ராய்காட்டில் 500 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட்டில் இருந்து மகாபலேஷ்வர் என்னும் இடம் நோக்கி, 'டாபோலி வேளாண் பல்கலைக் கழக' மாணவர்கள், உள்ளிட்ட 34 பேர், பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, அம்பேனல்லி என்னும், மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானது. 500 அடி பள்ளத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில், 33 பேர் உயிரிழந்தனர். இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Next Story