மகசேசே விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வு
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகாசேசே விருதுக்கு, இந்தியாவை சேர்ந்த பரத் வத்மானி மற்றும் சோனம் வாங்கக் உள்பட மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகாசேசே விருதுக்கு, இந்தியாவை சேர்ந்த பரத் வத்மானி மற்றும் சோனம் வாங்கக் உள்பட மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், விருதுக்கான தேர்வுக்குழு இந்த பட்டியலை வெளியிட்டது.
பரத் வத்வானி, மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டதற்காக இந்த கவுரவும் கிடைத்துள்ளது. இதேபோல, வட இந்தியாவில் தொலை தூரங்களில் உள்ள கிராமங்களில், சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உழைத்ததற்காக சோனம் வாங்சுக், உயரிய ரமன் மகாசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Next Story