ஜீவனாம்சத்தை சில்லரையாக கொண்டு வந்த கணவன்...!

மனைவிக்கு தர வேண்டிய 25 ஆயிரம் ஜீவனாம்சத்தை கணவன் சில்லரையாக நீதிமன்றத்திற்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜீவனாம்சத்தை சில்லரையாக கொண்டு வந்த கணவன்...!
x
     பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் அவரின் மனைவியும் விவாகரத்து கேட்டு தொடுத்துள்ளனர். இந்த நிலையில் மனைவிக்கு மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்குமாறு பஞ்சாப் மாநிலத்தில் கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம்  பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. 

 ஆனால் 2 மாதங்கள் அவர் ஜீவனாம்சம் அளிக்காததால்  மனைவி சார்பில் உயர் நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது.  
ஜீவனாம்ச தொகையை  உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், 25 ஆயிரம் ரூபாயை சில்லரையாக இரண்டு பைகளில்  நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவரின் மனைவி, தன்னை துன்புறுத்தும் நோக்கில் ஜீவனாம்ச தொகையை சில்லரையாக கொண்டு வந்துள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். 

 ஆனால் ஜீவனாம்ச தொயை சில்லரையாக கொடுக்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கணவர் சார்பில் வாதிட்டப்பட்டது. பின்னர் சில்லரை எண்ணப்பட்ட போது நீதிமன்றம் நேரம் முடிவடைந்ததால் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்