காவிரி பிரச்சினைக்கு காவிரித்தாயே நல்ல தீர்வு வழங்கியுள்ளார் - கர்நாடக முதலமைச்சர்

காவிரி பிரச்சினைக்கு காவிரித்தாயே நல்ல தீர்வை வழங்கியுள்ளதாகவும், இது நீதிமன்ற தீர்ப்பை விட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினைக்கு காவிரித்தாயே நல்ல தீர்வு வழங்கியுள்ளார் - கர்நாடக முதலமைச்சர்
x
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 19 ஆண்டுகளுக்கு பிறகு 4 அணைகளும் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளன. 

இதையடுத்து, இந்த அணைகளில் சிறப்பு பூஜை செய்ய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முடிவு செய்தார். இதன்படி, ஹாரங்கி அணையில் நேற்று பூஜை செய்த குமாரசாமி, காவிரி ஆறு உற்பத்தியாகும்  குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரியில், இன்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்