"மக்கள் ஆதரவு முழுமையாக கிடைக்கவில்லை" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர்

மக்கள் ஆதரவு இன்னும் தனக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு முழுமையாக கிடைக்கவில்லை - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர்
x
பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் முதலமைச்சர் குமாரசாமிக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்ததாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் மக்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்று கொள்ளவில்லை என்பதை தெரிந்ததாக வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின்மு தலமைச்சராக, தாம் பதவிக்கு வந்துள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.
தன் விருப்பத்தை இந்த மாநிலத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர மக்கள் இன்னும் ஆதரவளிக்க வில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்