"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி

"குடும்ப கட்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை"
முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது - பிரதமர் மோடி
x
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார்.. டெல்லியில் இருந்து விமானம் மூலம், தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அசம்கர் சென்றடைந்தார். அங்கு, புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட குடும்பக்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக  குற்றம்சாட்டினார். இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்காக இயற்றப்பட்ட முத்தலாக் முறை ரத்து மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், எதிர்க்கட்சிகளின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டதாக மோடி விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்