கால்வாயை கடக்க அபாய பயணம் மேற்கொள்ளும் பள்ளிச் சிறுவர்கள்

பாலம் உடைந்து 2 மாதமாகியும் சரிசெய்யாததால் பாதிப்பு
கால்வாயை கடக்க அபாய பயணம் மேற்கொள்ளும் பள்ளிச் சிறுவர்கள்
x
குஜராத் மாநிலம் கேடா பகுதியில் நைகா, பீராய் கிராமங்களை இணைக்கும் வகையில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்ததால், அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கால்வாயை கடக்க வழியில்லாததால், தடுப்பணை வழியாக அபாயத்தை உணராமல் பள்ளிச் சிறுவர்களை, அவர்களது பெற்றோர் அழைத்துச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்