தென்கொரிய அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று உற்சாக வரவேற்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
தென் கொரியா அதிபர் மூன்-ஜே-இன் நான்கு நாள் பயணமாக கடந்த 8ம் தேதி இந்தியா வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பிரதமர் மோடியுடன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், பல்வேறு
ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.முன்னதாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற மூன் ஜே இன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Next Story