ஏழுமலையான் கோயிலில் தூய்மை பணி - 5 மணி நேரம் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார்தி ருமஞ்சனத்தையொட்டி, 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
ஏழுமலையான் கோயிலில் தூய்மை பணி - 5 மணி நேரம் தரிசனம் ரத்து
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு  ஆண்டும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய தினங்களுக்கு முன் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயிலை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி, இன்றைய தினம் ஆழ்வார் திருமஞ்சனமான, கோயிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் சுவற்றில் தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்