அரசுப்பள்ளியில் சேர்த்தால் தங்க நாணயம் பரிசு...

அரசுப்பள்ளியை காக்க ஊர் மக்கள் புது முயற்சி
அரசுப்பள்ளியில் சேர்த்தால் தங்க நாணயம் பரிசு...
x
கோவை மாவட்டம், அன்னூரில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோனார்பாளையம் கிராமத்தில், உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது. 

இதனால், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என, கிராமமக்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பினை தொடர்ந்து, கடந்த 2 நாட்களில் மட்டும், மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்