அரசுப்பள்ளியில் சேர்த்தால் தங்க நாணயம் பரிசு...
அரசுப்பள்ளியை காக்க ஊர் மக்கள் புது முயற்சி
கோவை மாவட்டம், அன்னூரில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோனார்பாளையம் கிராமத்தில், உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது.
இதனால், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என, கிராமமக்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பினை தொடர்ந்து, கடந்த 2 நாட்களில் மட்டும், மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
Next Story