திடீரென ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் - அதிகாரிகளுடன் பேசி மாற்று ஏற்பாடு செய்த தமிழிசை

வீட்டிற்கு செல்லுங்கள் என அதிகாரிகள் சொன்னதால் அதிருப்தி
திடீரென ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் - அதிகாரிகளுடன் பேசி மாற்று ஏற்பாடு செய்த தமிழிசை
x
உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு அந்தமானிற்கு ஏர்-இந்தியா விமானம் செல்ல இருந்தது. விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள், சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள், மீண்டும் அந்தமான் செல்ல விமான நிலையத்தில் தயராக இருந்தனர். அப்போது, விமானம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பயணிகள் வீட்டிற்கு செல்லவும் எனவும் ஏர் இந்தியா விமான அதிகாரிகள் தெரிவித்தனர். பரமக்குடி, ராமேஸ்வரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து அந்தமான் செல்ல வந்தவர்கள், இந்த அறிவிப்பை கேட்டு ஆத்திரமடைந்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அதிகாரிகளுடன் பேசி மாற்று ஏற்பாடு செய்த தமிழிசை, இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பயணிகளிடம் சமாதானம் பேசினார். பின்னர், ஏர்-இந்தியா அதிகாரிகளுடன் பேசி, பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து பயணிகளை சென்னையில் தங்க வைக்க ஏர் இந்தியா விமான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். நாளை, அந்தமான் செல்லும் விமானத்தில் பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்படவார்கள் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்