மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் : விண்ணப்பிக்காத பெண் வங்கி கணக்கில் ரூ.45,000 டெபாசிட்
உரியவரை நேரில் சந்தித்து பணம் தர சம்மதம்
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், கோவை மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவரது வங்கி கணக்கில் திங்கள்கிழமை 45 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. வேறு பயனாளிக்கு அனுப்ப வேண்டிய தொகை தன்னுடைய வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்துள்ளதாகவும், உரியவரை நேரில் சந்தித்து அந்த தொகையை தர தயாராக உள்ளதாகவும் பிருந்தா கூறியுள்ளார்.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வி பிரியா என்பவருக்கு அனுப்ப வேண்டிய தொகை தவறுதலாக பிருந்தா கணக்கில் செலுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிருந்தா, செல்வ பிரியாவுக்கு பணத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
Next Story