களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா; சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் மின்விளக்குகள் எரியாததால் பூங்கா இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா; சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா



வைகை அணை பூங்காவில் பல வருடங்களாக இயங்கி வந்த நீருற்றுகள் அனைத்தும் செயல்பாடின்றி வறண்டு காணப்படுகிறது. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகள் மற்றும் அழகு செடிகள் காய்ந்து வருகிறது . மேலும் பூங்கா பகுதிகளில் உள்ள  கண்கவரும் சிலைகளும் , சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல்களும் சேதமடைந்துள்ளது. 



இதனையடுத்து பூங்காவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மாலை நேரத்தில் பூங்காவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள்  பூங்காவை சீரமைக்கும்மாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்