குழந்தை கடத்தல் - தொடரும் தாக்குதல் சம்பவம் : "வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை"

குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழந்தை கடத்தல் - தொடரும் தாக்குதல் சம்பவம் : வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திநகர், காவல் துணை ஆணையர் அரவிந்தன், குழந்தை கடத்துவது போன்ற தகவல் அல்லது சந்தேகம் ஏதேனும் இருந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார். தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் ஈடுபடுவது கண்டித்தக்கது என்றும் அவர் கூறினார். தேனாம்பேட்டையில் வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட வில்லை என்றும், இதுதொடர்பாக வதந்தி பரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் - சென்னை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபம் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தொடங்கி வைத்தார். அப்போது சிசிடிவி கேமரா பொருத்துவதன் முக்கியத்துவம் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்