காவிரி விவகாரம் : தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை

காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
காவிரி விவகாரம் : தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை
x
காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார்,  ஆணைய உத்தரவு குறித்து, தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார். அதேநேரம், காவிரி நீரை திறந்து விடக்கோரி தமிழகம் தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது என்றார். காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் முடிந்ததும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்