காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்

புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுகோட்டை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.  வாரத்தில், திங்கள் மற்றும் வியாழன் அன்று மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் கண்டனூர், புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் 3 மணி நேரம் ஆக கூடிய நிலையில், ரயிலில் ஆறரை மணி நேரம் ஆகும் என்பதால், இந்த பயண நேரத்தை குறைத்து தினமும் ரயிலை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்