தனியார் பள்ளி தாறுமாறாக வேனை இயக்கிய ஓட்டுநர்; ஒருவர் உயிரிழப்பு, 3 ஆட்டோக்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி வேன் ஒன்று தாறுமாறாக ஓடி 3 ஆட்டோக்கள் மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனியார் பள்ளி தாறுமாறாக வேனை இயக்கிய ஓட்டுநர்; ஒருவர் உயிரிழப்பு, 3 ஆட்டோக்கள் சேதம்
x
வேனை இயக்கிய ஓட்டுநர்; ஒருவர் உயிரிழப்பு



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி வேன் ஒன்று தாறுமாறாக ஓடி 3 ஆட்டோக்கள் மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மரியதால் என்பவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  இன்று வழக்கம் போல்  பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டு பள்ளிக்கு செல்லும் வழியில்,  வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியுள்ளது. இதில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த 3 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்