கோவிலில் கொள்ளை முயற்சி - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்
எடப்பாடி அருகே கோவிலில் 4 பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது.
எடப்பாடி அருகே கோவிலில் 4 பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது. குப்பநூர் காளியம்மன் கோவிலுக்கு இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். முதலில் கோவில் வளாகத்தில் இருந்த பல்புகளை கழற்றிய அவர்கள், பின்பு கோவில் கதவில் உள்ள பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் சென்றுவிட்டனர். கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகளை வைத்து, காவல் துறையினர் அந்த திருடர்களை தேடி வருகின்றனர்.
Next Story