தந்தையே மகளை அடித்து கொன்ற சம்பவம்

கவுரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் கொலை செய்த தந்தை
தந்தையே மகளை அடித்து கொன்ற சம்பவம்
x
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், கோட்டையா என்பவரின் மகள் சந்திரிகா, தமது பிறந்த நாள் அன்று, செல்போனில்  நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கவனித்த கோட்டையா, தமது மகள் தவறான வழியில் செல்கிறாள் என கருதி, கோடாரியால் சந்திரிகாவை அடித்து கொலை செய்துள்ளார்.  இது குறித்து ஊர்மக்கள் அளித்த தகவலின்பேரில்,  கோட்டையாவை காவல்துறையினர் கைது செய்தனர்.    தவறான வழியில் மகள் சென்றால் கவுரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் தந்தையே மகளை அடித்து கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்